பேங்காக்: பேங்காக்கின் சாய் மாய் வட்டாரத்தில், தமது வீட்டிலிருந்து ஆகாயத்தில் துப்பாக்கியால் பலநேரம் சுட்ட வண்ணம் இருந்த காவல்துறை அதிகாரியைத் தாய்லாந்துக் காவல்துறையின் சிறப்புப் படையினர் சுட்டுக் காயப்படுத்தினர்.
காவல்துறை லெஃப்டினண்ட் கர்னல் கிட்டிக்கன் சேங்பூன் சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டார்.
உளவுத் துறையில் பணியாற்றிய கிட்டிக்கனுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகக் கூறப்பட்டது. நேற்று முன்தினம் பிற்பகலில் கிட்டிக்கன் சுடத் தொடங்கியதும் அப்பகுதி மக்கள் வீடுகளைவிட்டு வெளியேற்றப்பட்டனர். இரவிலும் அவர் துப்பாக்கியால் தொடர்ந்து சுட்டார். ஆனால் அவர் யாரையும் பிணை பிடிக்கவில்லை.
காவல்துறையினர் வீட்டுக்குள் கண்ணீர் புகைக் குண்டு களை வீசியும் மின்தொடர்பைத் துண்டித்தும் அவரை அங்கிருந்து வெளியேற்ற முயன்றனர்.
ஆனால் 20 மணி நேரப் பேச்சுவார்த்தை பலனளிக்காததால் சிறப்புப் பிரிவு உள்ளே அனுப்பப்பட்டது.
கிட்டிக்கனின் உடல்நிலை குறித்த விவரம் தெரியவில்லை.

