தாய்லாந்தில் எல்லா துப்பாக்கிகளையும் பதிவுசெய்யத் திட்டம்

தாய்லாந்தில் எல்லா துப்பாக்கிகளையும் பதிவுசெய்யத் திட்டம்

1 mins read
0130d4e3-ce2c-4e8b-9544-72a46cfb06fd
-

பேங்­காக்: தாய்­லாந்­தில் அனைத்­துத் துப்­பாக்­கி­க­ளை­யும் பதி­வு­செய்­வ­தைக் கட்­டா­ய­மாக்­கு­வது குறித்து ஆலோ­சிக்­கப்­பட்டு வரு­கிறது.

சில மாதங்­க­ளுக்கு முன்பு வட­கி­ழக்கு தாய்­லாந்­தில் உள்ள பாலர் பள்ளி ஒன்­றில் துப்­பாக்­கிச் சூட்­டுத் தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. அதில் கிட்­டத்­தட்ட 24 மழ­லை­யர் மாண்­ட­னர். அ­தைத் தொடர்ந்து இந்த விதி­மு­றையை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது குறித்து ஆலோ­சிக்­கப்­ப­டு­கிறது.

துப்­பாக்­கி­கள் வைத்­தி­ருப்­போருக்கு அவற்­றைப் பதி­வு­செய்து­கொள்ள 180 நாள்­கள் வழங்­கப்­ப­ட­லாம். அந்­தக் கால­கட்­டத்­தில் அவர்­கள்­மீது குற்­றச்­சாட்­டு­கள் சுமத்­தப்­ப­டாது என்று தாய்­லாந்து அர­சாங்­கத்­தின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இதற்கு வழி­வ­குக்­கும் பரிந்­து­ரைக்கு அமைச்­ச­ரவை ஒப்­பு­தல் வழங்­கி­யுள்­ளது. இதன்­படி கொடுக்­கப்­பட்ட காலத்­திற்­குள் தங்­க­ளின் துப்­பாக்­கி­க­ளைப் பதிவு­செய்­யா­தோர் அவற்றை அதி­கா­ரி­க­ளி­ட­மும் ஒப்­ப­டைக்­கலாம். அவ்­வாறு செய்­வோர்­மீதும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படாது.

இதற்­கி­டையே, நேற்று முன்­தி­னம் சிறப்­புக் காவல்­து­றைப் படை­யி­ன­ரால் அடக்­கப்­பட்ட காவல்­துறை அதி­காரி ஒரு­வர் மாண்­டு­விட்­டார்.

51 வயது கிட்­டிக்­கன் சாயெங்­பூன் எனும் அந்த காவல்­துறை அதி­காரி, கடந்த செவ்­வாய்க்­கிழமை­யன்று பேங்­காக்­கின் சாய் மாய் வட்­டா­ரத்­தில் தனது வீட்­டி­லி­ருந்து வானை நோக்­கிச் சுட்­டார். அவ­ரைக் கட்­டுப்­ப­டுத்த சுமார் 24 மணி­நே­ரம் தேவைப்­பட்­டது.

கிட்டிக்கன்னை சிறப்­புக் காவல்­து­றைப் படை­யி­னர் சுட்­ட­னர். அதைத் தொடர்ந்து மருத்­து­வ­மனை ஒன்­றில் அவர் உயி­ரி­ழந்­தார்.