தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அமெரிக்காவிற்கு எதிராக போரிட 800,000 பேர் விருப்பம்'

1 mins read
c9b8237c-c47e-4beb-8491-c36e195faaa9
-

சோல்: அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக போரிட கிட்­டத்­தட்ட 800,000 குடி­மக்­கள் முன்­வந்­துள்­ள­தாக வட­கொ­ரியா தெரி­வித்­துள்­ளது.

மாண­வர்­கள், பணி­யா­ளர்­கள் என வெள்­ளிக்­கி­ழமை மட்­டும் கிட்­டத்­தட்ட 800,000 பேர் மீண்­டும் ராணு­வத்­தில் இணைந்து அமெ­ரிக்­கா­விற்கு எதி­ராக போரிட விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக அந்­நாட்­டின் ரோடோங் சின்­முன் நாளி­தழ் சொன்­னது.

அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் சென்ற திங்­கட்­கி­ழமை முதல் 11 நாள் கூட்டு ராணு­வப் பயிற்­சி­யில் ஈடு­பட்டு வருகின்றன.

அத்துடன் தென்கொரிய அதிபரும் வடகொரியாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்வது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக ஜப்பான் வியாழக்கிழமை ஜப்பான் சென்றிருந்தார். தென்கொரியாவும் அமெரிக்காவும் வட்டாரத்தில் பதற்றத்தை ஏற்படுத்துவதாக வடகொரியா சொன்னது.

இவ்வேளை­யில், வியா­ழக்­கி­ழ­மை­யன்று வட­கொ­ரியா ஹவா­சாங்-17 என்ற கண்­டம் விட்டு கண்­டம் பாயும் ஏவு­க­ணையை பரி­சோ­தனை செய்­தது.

அந்த ஏவு­கணை கொரிய தீப­கற்­பத்­திற்­கும் ஜப்­பா­னுக்­கும் இடை­யில் ஏவப்­பட்­டது.