எக்குவடோரில் நிலநடுக்கம்: குறைந்தது 15 பேர் மரணம்

எக்குவடோரில் நிலநடுக்கம்: குறைந்தது 15 பேர் மரணம்

1 mins read
361d14f5-f587-41da-b4c2-fa1fa21e42f5
-

கிட்டோ (எக்­கு­வ­டோர்): லத்­தின் அமெ­ரிக்க நாடான எக்­கு­வ­டோ­ரின் தெற்­குக் கடற்­க­ரைப் பகுதியை உலுக்­கிய நில­ந­டுக்­கத்­தால் குறைந்­தது 15 பேர் மாண்­ட­னர். 400க்கும் அதி­க­மா­னோர் காய­முற்­ற­னர்.

6.7 ரிக்­டர் அள­வி­லான இந்த நில­ந­டுக்­கம் அண்டை நாடான பெரு­வின் வடக்­குப் பகு­தி­யி­லும் உண­ரப்­பட்­டது. இரு­நாட்டு எல்­லைப் பகு­தி­யில் உள்ள பெரு­வின் தும்­பஸ் மாநி­லத்­தில் ஒரு 14 வயது பெண் உயி­ரி­ழந்­தார்.

நில­ந­டுக்­கத்­தால் தனது வீடு இடிந்­து­வி­ழுந்­ததில் அப்­பெண் மாண்­டார்.

எக்­கு­வ­டோ­ரில் மக்­காலா, குவென்சா உள்­ளிட்ட நக­ரங்­கள் ஆக அதிக பாதிப்­புக்கு உள்­ளாயின. அவற்­றில் பல கட்­ட­டங்­களும் வாக­னங்­களும் சேத­மடைந்­தன.

நில­ந­டுக்­கத்­தால் பல இடங்­களில் நிலச்­ச­ரிவு ஏற்­பட்­டது. பல வீடு­கள், கல்வி நிலை­யங்­கள், சுகா­தார நிலை­யங்­கள் உள்­ளிட்­டவை சேத­ம­டைந்­த­தாக அதி­காரி­கள் தெரி­வித்­த­னர்.

அவ­ச­ரச் சேவை­களை வழங்­கும் அமைப்­பு­கள் பாதிக்­கப்­பட்­டோ­ருக்கு உத­வும் பணி­களில் தீவி­ர­மாக ஈடு­பட்­டன.

எக்­கு­வ­டோ­ரின் இரண்­டா­வது ஆகப் பெரிய நக­ரான குவா­யா­கு­வில்­லுக்கு சுமார் 30 கிலோ­மீட்­டர் தொலை­வில் இருக்­கும் பாலாவ் நக­ருக்கு அருகே நில­நடுக்­கம் தொடங்­கி­யது. அங்கு கிட்­டத்­தட்ட மூன்று மில்­லி­யன் மக்­கள் வாழ்­கின்­ற­னர்.

நில­ந­டுக்­கத்­தால் ஏற்­பட்ட சேதத்தை அதி­கா­ரி­கள் ஆராய்ந்து வரு­கின்­ற­னர். அது­வரை பொறு­மை­யாக இருக்­கு­மாறு எக்­கு­வ­டோர் அதி­பர் குவி­யர்மோ லாசோ தமது நாட்டு மக்­க­ளைக் கேட்­டுக்­கொண்­டார்.