வெள்ள அபாயமுள்ள இடங்களில் எச்சரிக்கை ஒலிக் கருவிகள்

1 mins read
88dc9ab6-7be9-4a80-b537-49c74432c1a3
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் வெள்­ளத்­தால் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கப்­ப­டக்­கூ­டிய 526 இடங்­களில் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை ஒலிக் கரு­வி­கள் பொருத்­தப்­ப­டு­வ­தாக அந்­நாட்­டின் இயற்கை வளங்­கள், சுற்­றுப்­பு­றம், வானிலை மாற்ற அமைச்­சர் நிக் நாஸ்மி நிக் அக­மது அறி­வித்­துள்­ளார்.

சாபா­வில் மொத்­தம் 117, சிலாங்­கூ­ரில் 99, ஜோகூ­ரில் 45, பாகாங்­கில் 40, கெடா­வில் 38 பினாங்­கில் 27, தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் 24, சர­வாக்­கில் 23, நெகிரி செம்­பி­லா­னில் 21, மலாக்­கா­வில் 13, பெர்­லி­சில் 12, லாபு­வா­னில் 1, திரங்­கா­னு­வில் 10 எச்­ச­ரிக்கை ஒலிக் கரு­வி­கள் பொருத்­தப்­ப­டு­வ­தாக அவர் தெரி­வித்­தார். பேராக், கிளந்­தான் ஆகிய மாநி­லங்­களில் தலா 28 எச்­சரிக்கை ஒலிக் கரு­வி­கள் பொருத்­தப்­ப­டு­கின்­றன.

அடையாளம் காணப்பட்டுள்ள இடங்களில் வெள்ள அபாய எச்­ச­ரிக்கை ஒலிக் கரு­வி­களை நீர்ப்­பா­சன, வடி­கால் துறை பொருத்­து­வ­தாக அமைச்­சர் நிக் நாஸ்மி கூறி­னார்.

மழை­யின் அள­வை­யும் நீர் மட்டத்தையும் கண்­கா­ணிக்க தேசிய வெள்ள முன்­னு­ரைப்பு, எச்சரிக்கை முறையை இத்­துறை பயன்­ப­டுத்­து­வ­தாக அமைச்சர் நிக் நாஸ்மி தெரி­வித்­தார்.