பேங்காக்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கின் கடைத்தொகுதி ஒன்றில் 30 ஆண்டுகளாக வாழும் இந்த கொரில்லா குரங்கின் பெயர் புவா நொய். கடைத்தொகுதியில் உள்ள பட்டா எனும் விலங்குத் தோட்டத்தில் இது வசிக்கிறது. இங்கிருந்து புவா நொய்யை இடம் மாற்றவேண்டும் என்று உலகளவில் பலர் குரல் கொடுத்துள்ளனர். எனினும், அழிந்துபோகும் அபாயம் உள்ள கொரில்லா வகையைச் சேர்ந்த புவா நொய்யை விட்டுக்கொடுக்க மறுத்து வருகின்றனர் இதை வளர்க்கும் குடும்பத்தினர்.
படம்: ஏஎஃப்பி

