பெய்ஜிங்: உக்ரேன்மீது ரஷ்யா படையெடுத்த பிறகு இந்த ஓராண்டு காலத்தில் சீனா, ரஷ்யாவிடமிருந்து வாங்கும் எண்ணெய், கரிமம், எரிவாயு போன்ற எரிபொருள்களின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு வாங்கியதில் கிட்டத்தட்ட ஒன்றரை மடங்கு எரிபொருள்களை சீனா, ரஷ்யாவிடமிருந்து வாங்கியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்ற ஆண்டு பிப்ரவரி மாதத்திலிருந்து சென்ற மாதம் வரை ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கிய எரிபொருள்களின் மதிப்பு 88 பில்லியன் டாலருக்கு (118 பில்லியன் வெள்ளி) அதிகரித்திருப்பதாக சீனாவின் குடிநுழைவுத் துறையின் புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.
உக்ரேன் போர் தொடங்கியதிலிருந்து பல்வேறு உலக நாடுகள் ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் உட்பட பலவகை பொருள்களை இறக்குமதி செய்வதைத் தவிர்த்து வருகின்றன. அத்தகைய நாடுகள் விட்டுவைத்திருக்கும் வெற்றிடத்தை இப்போது சீனா நிரப்பியுள்ளது.
உக்ரேன் போர் தொடங்குவதற்கு முன்பு ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கிய எரிபொருள்களின் மதிப்பு கிட்டத்தட்ட 57 பில்லியன் டாலர் மட்டுமே.
உக்ரேன்மீது படையெடுத்ததற்காக உலக நாடுகள் ரஷ்யாமீது பல தடை உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. அப்படியிருந்தும் போரைத் தொடர ரஷ்யாவுக்குப் போதுமான நிதி இருந்து வந்துள்ளது. மேலும், சலுகை விலையில் சீனா, ரஷ்யாவிடமிருந்து எரிபொருள்களை வாங்கி வருகிறது.
ரஷ்யாவிடமிருந்து சீனா வாங்கும் எரிபொருள்களின் அளவு கணிசமாக அதிகரித்தது

