கோலாலம்பூர்: சிறையில் இருக்கும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக்கின் மனைவி ரோஸ்மா மன்சூர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எனவே வழிதிருவாட்டி ரோஸ்மாவின் கடவுச்சீட்டை தற்காலிகமாக திரும்பத் தருமாறு மலேசியாவின் மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவாட்டி ரோஸ்மாவின் மகளும் பேரனும் சிங்கப்பூரில் இருக்கின்றனர். நோன்புப் பெருநாளையொட்டி இருவரையும் சந்திக்க அவர் சிங்கப்பூருக்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அவரின் பேரனுக்கு உடல்நலம் சரியில்லை.
நாளை முதல் வரும் மே மாதம் ஐந்தாம் தேதி வரை சிங்கப்பூரில் இருக்க திருவாட்டி ரோஸ்மாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

