மூழ்கிய எண்ணெய்க் கப்பல் 3 வாரங்களுக்குப் பிறகு மீட்பு

மூழ்கிய எண்ணெய்க் கப்பல் 3 வாரங்களுக்குப் பிறகு மீட்பு

1 mins read
db8d08dc-7376-4043-b2fb-8782f1958a11
-

போலா (பிலிப்­பீன்ஸ்): பிலிப்­பீன்­சில் மூழ்­கிய எண்­ணெய்க் கப்­பல் ஒன்று மூன்று வாரங்­க­ளுக்­குப் பிறகு கண்­டு­பி­டிக்­கப்­பட்டுள்­ளது. கப்­ப­லி­லி­ருந்து கசிந்த எண்­ணெய் கடல் வாழ் உயி­ரி­னங்­கள் அதி­கம் இருக்­கும் பகுதி­க­ளுக்­குச் செல்­லத் தொடங்­கிய வேளை­யில் அது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

'பிரின்­செஸ் எம்பி­ரஸ்' எனும் அந்­தக் கப்­பல் 800,000 லிட்­டர் அள­வி­லான கச்சா எண்­ணெயை ஏற்­றிச் சென்­று­கொண்­டி­ருந்­தது. சென்ற மாதம் 28ஆம் தேதி­யன்று மிண்­டோரோ தீவுக்கு அருகே அது மூழ்­கி­யது.