பேங்காக்: இவ்வாண்டு மே மாதம் 14ஆம் தேதியன்று தாய்லாந்தின் பொதுத் தேர்தல் நடைபெறும். அந்நாட்டின் தேர்தல் ஆணையத் தலைவர் இட்டிப்பொர்ன் பூன்பிராக்கோங் நேற்று இதை அறிவித்தார்.
பொதுத் தேர்தல் நடைபெறவிருப்பதை முன்னிட்டு தாய்லாந்து நாடாளுமன்றம் நேற்று முன்தினம் கலைக்கப்பட்டது.
இவ்வாண்டின் பொதுத் தேர்தலில் தற்போதைய பிரதமர் பிரயுத் சான் ஓசாவின் கூட்டணிக்கும் தாய்லாந்தின் ஆகப் பெரிய எதிர்க்கட்சியான ஷினாவாட்ரா குடும்பத்தின் ஃபியூ தாய் கட்சிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

