ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்; குறைந்தது 11 பேர் மரணம்

ஆப்கான், பாகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம்; குறைந்தது 11 பேர் மரணம்

1 mins read
38e56622-57df-4508-8bf4-cc34ca429ff6
-

காபூல்: ஆப்­கா­னிஸ்­தான், பாகிஸ்­தான் எல்­லை­யில் செவ்­வாய்க்­

கி­ழமை இரவு ரிக்­டர் அள­வில் 6.5ஆகப் பதி­வா­கிய நில­ந­டுக்­கம் ஏற்­பட்­டது. இதில் 11 பேர் மர­ண­

ம­டைந்­த­து­டன் இத­னால் இந்­தி­யா­வின் சில பகு­தி­க­ளி­லும் நில அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

"இது ஒரு பயங்­க­ர­மான நில­ந­டுக்­கம். இது­போன்ற நில அதிர்வை நான் எனது வாழ்

­நா­ளில் சந்­தித்­த­தில்லை," என்று ஆப்­கா­னிஸ்­தான் தலை­ந­கர் காபூ­லில் வசிக்­கும் கட்­டேரா என்ற 50 வயது ஆட­வர் தெரி­வித்­தார். நில­ந­டுக்­கத்­தால் தான் தங்­கி­

யி­ருந்த ஐந்து மாடிக் கட்­ட­டத்­தி­லி­ருந்து அவ­ச­ர­மாக வெளி­யே­றி­ய­தாக அவர் விளக்­கி­னார்.

இந்த நில­ந­டுக்­கம் 1,800 கிலோ­மீட்­டர் பரப்­ப­ள­வில் 285 மில்­லி­யன் மக்­கள் வாழும் பாகிஸ்­தான், இந்­தியா, உஸ்­பெக்­கிஸ்­தான், தஜி­கிஸ்­தான், கஸகஸ்­தான், ஆப்­கா­னிஸ்­தான், துர்க்மெனிஸ்­தான் ஆகிய நாடு­களில் உண­ரப்­பட்­ட­தாக செய்­தித் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

இந்த நில­ந­டுக்­கம் இந்துகுஷ் மலைப்­ப­கு­தி­யில் வட­மேற்கு ஆப்­கா­னிஸ்­தா­னில், குறைந்த அள­வி­லான மக்­கள் வசிக்­கும் ஜுரும் என்ற கிரா­மத்­தில் மையம் கொண்­ட­தாக ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.