ஜகார்த்தா: எதிர்வரும் நாள்களில் மியன்மாரில் உள்ள நிறுவனங்களுக்கு எதிராக மேலும் தடைகள் விதிக்கப்படும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க உள்துறை அமைச்சு ஆலோசகர் டெரக் சோலெட், இந்தத் தடைகள் மியன்மார் ராணுவ ஆட்சி மன்றம் ஆயுதங்கள் வாங்கத் தேவைப்படும் பணத்தை ஈட்ட மேலும் சிரமமாக்கும் என்று கூறினார்.
"மியன்மார் ராணுவ ஆட்சி மன்றம் மீதான நெருக்குதலை அதிகரித்து அது போருக்குத் தேவையான பணம் ஈட்டுவதை மேலும் சிரமப்படுத்துவோம்," என்று கூறிய திரு சோலெட், தென்கிழக்கு ஆசியாவில் மியன்மார் செயலிழந்து நிற்கும் நாடு என்ற நிலையை நோக்கிச் செல்கிறது என்றார்.
மியன்மார் ராணுவம் அந்நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கடந்த 2021ஆம் ஆண்டு கவிழ்த்தது.
அதுமுதல் அந்நாட்டு ராணுவம் ஆட்சியின் எதிர்ப்பாளர்கள்மீது கடுமையான அடக்கு
முறையை கட்டவிழ்த்து விட்டுள்ளது.
இதனால் அந்நாடு பெரும் குழப்பநிலைக்குத் தள்ளப்
பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகள் ராணுவ ஆட்சி மன்ற உறுப்பினர்கள், ராணுவ ஆட்சி அமைப்புகள், ராணுவக் கட்டுப் பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் போன்றவை மீது தொடர் தடைகளை விதித்த வண்ணம்
உள்ளன.

