'அன்வாருடன்தான் ஆக சுமுகமாக வேலை செய்ய முடிகிறது'

'அன்வாருடன்தான் ஆக சுமுகமாக வேலை செய்ய முடிகிறது'

1 mins read
1e58dfc6-d52c-4b63-a0a6-c0e3aa264c00
-

கோலா­லம்­பூர்: இதற்கு முன்பு மலே­சி­யப் பிர­த­ம­ராக இருந்­தோ­ரு­டன் ஒப்­பி­டு­கை­யில் தற்­போ­தைய பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மு­டன்­தான் தம்­மால் ஆக சுமு­க­மா­கப் பணி­யாற்ற முடி­வ­தாக ஜோகூர் மாமன்­னர் இப்­ரா­கிம் இஸ்­கந்­தர் கூறி­யுள்­ளார். 'தி ஸ்டார்' நாளி­த­ழு­டன் நடை­பெற்ற நேர்­கா­ண­லில் அவர் இக்­க­ருத்தை வெளி­யிட்­டார்.

சந்­திப்­பு­கள், தொலை­பேசி உரை­யா­டல்­கள் ஆகி­ய­வற்­றின் வாயி­லாக திரு அன்­வா­ரு­டன் பல கருத்­து­க­ளைப் பரி­மா­றிக்­கொள்ள முடி­வ­தா­க­வும் அது இரு­வ­ருக்­கும் இடையே நல்­லுறவை வளர்க்கக் கைகொ­டுத்­தி­ருப்­ப­தா­க­வும் மாமன்­னர் குறிப்­பிட்­டார்.

நாட்டின் 'புற்­று­நோயாக' உருவெடுத்துள்ள ஊழல் பிரச்­சி­னையை ஒழிக்­க­வேண்­டும் என்­றும் அவர் சுட்­டி­னார்.