அமெரிக்கர் கொல்லப்பட்டதால் சிரியாமீது வான்வழி தாக்குதல்

அமெரிக்கர் கொல்லப்பட்டதால் சிரியாமீது வான்வழி தாக்குதல்

1 mins read
5a889839-42e4-497f-ac5f-eed9a15cabbf
-

வாஷிங்­டன்: சிரி­யா­வில் ஆளில்லா வானூர்தி மூலம் நடத்­தப்­பட்ட தாக்­கு­த­லில் அமெ­ரிக்க ஒப்­பந்­த­தா­ரர் ஒரு­வர் கொல்­லப்­பட்­டார்.

அத்­தாக்­கு­த­லில் அமெ­ரிக்­கப் படை­யி­னர் ஐவர் உட்­பட மேலும் அறு­வர் காய­ம­டைந்­த­னர். நேற்று முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை அத்­தாக்­கு­தல் அரங்­கே­றி­யது.

வட­கி­ழக்கு சிரி­யா­வில் அல் ஹசக்கா அரு­கே­யுள்ள கூட்டு ராணு­வப் படைத்­த­ளத்­தைக் குறி­வைத்து, அத்­தாக்­கு­தல் நிகழ்த்­தப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.

சிரி­யா­வி­லுள்ள ஈரான் ஆத­ர­வுக் குழுக்­கள் இதற்­குக் கார­ணம் என அமெ­ரிக்கா குற்­றஞ்­சாட்­டி­யது.

இத­னைத் தொடர்ந்து, அதி­பர் ஜோ பைடன் உத்­த­ர­வின்­படி அக்­கு­ழுக்­க­ளைக் குறி­வைத்து அமெ­ரிக்க ராணு­வம் வான்­வ­ழி­யாக பதில் தாக்­கு­தல் நடத்­தி­யது.

அத்தாக்குதலில் ஈரான் ஆத­ரவுப் படை­யி­னர் 11 பேர் கொல்­லப்­பட்­ட­தாகக் கூறப்­பட்­டது.