தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'அணுவாயுத' ஆளில்லா வானூர்தி: கடலுக்கடியில் வடகொரியா சோதனை

1 mins read
3ba66ecd-416b-47ed-9a7c-5bdab1db82f0
-

பியோங்­யாங்: நீருக்­க­டி­யில் 'கதி­ரி­யக்க சுனாமி'யை ஏற்­ப­டுத்­த­வல்ல ஆளில்லா வானூர்­தி­யைச் சோதித்­துப் பார்த்­துள்­ள­தாக வட­கொ­ரியா தெரி­வித்­துள்­ளது.

தெற்கு ஹம்­கி­யோங் மாநி­லத்தை ஒட்­டிய கடற்­ப­கு­தி­யில் அந்த 'ரக­சிய ஆயு­தத்தை' வட­கொ­ரியா சோதித்­துப் பார்த்­தது என்று அந்­நாட்­டின் அர­சாங்க ஊட­க­மான கேசி­என்ஏ கூறி­யது. கட­லுக்­க­டி­யில் 80 முதல் 150 மீட்­டர் ஆழத்­தில் 59 மணி நேரத்­திற்­கும் மேல் பய­ணம் செய்தபின் அது வெடித்­த­தா­கக் கூறப்­பட்­டது.

பேர­ளவு கதி­ரி­யக்க அலை மூலம் எதி­ரிக் கப்­பல்­க­ளை­யும் துறை­மு­கங்­க­ளை­யும் தாக்­கும் வகை­யில் அந்த ஆயு­தம் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது என்­றும் அச்­செய்தி குறிப்­பிட்­டது.

அத்­து­டன், அந்­தக் கட­லடி அணு­வா­யுத ஆளில்லா வானூர்­தியை எந்­தக் கட­லோரப் பகு­தி­யி­லும் துறை­மு­கத்­தி­லும் நிறுத்த முடி­யும் அல்­லது ஒரு கப்­ப­லால் எந்த இடத்­திற்­கும் இழுத்­துச் செல்ல முடி­யும் என்­றும் சொல்லப்பட்டது.

கொரிய தீப­கற்­பத்­தில் வெகு­கா­ல­மா­கவே பதற்­ற­நிலை நீடித்து வரு­கிறது.

இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் வியா­ழக்­கி­ழமை அமெ­ரிக்­கா­வும் தென்­கொ­ரி­யா­வும் கடந்த ஐந்­தாண்­டு­களில் இல்­லாத அள­விற்கு ஆகப் பெரிய கூட்டு ராணு­வப் பயிற்­சி­களை மேற்­கொண்­டன.