ஐந்து மலேசிய குடிநுழைவு அதிகாரிகள் கைது

2 mins read
b759a562-3c92-4715-bff5-15ba918b06d9
-

கோலா­லம்­பூர்: வெளி­நாட்­ட­வரை மலே­சி­யா­வுக்­குள் கடத்தி வந்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் ஒன்­பது பேரை அந்­நாட்­டின் ஊழல் தடுப்பு கண்­கா­ணிப்பு அமைப்பு கைது செய்­துள்­ளது. கைதா­னவர்­களில் மலே­சி­யா­வின் ஐந்து குடி­நு­ழை­வுத் துறை அதி­கா­ரி­களும் அடங்­கு­வர்.

சந்­தேக நபர்­கள் சாபா மாநி­லம் வழி­யாக வெளி­நாட்டு ஊழி­யர்­களை மலே­சி­யா­வுக்­குள் கடத்தி வர முயன்­ற­தா­கக் கூறப்­படு­கிறது. பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் இந்த விவ­ரங்­க­ளைத் தெரி­வித்­தது.

கைதான குடி­நு­ழைவு அதி­கா­ரி­களில் இரு­வர் பெண்­கள். கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று மலே­சி­யா­வின் எம்­ஏ­சிசி எனும் ஊழல் தடுப்பு ஆணை­யம், ஜேபிஎன் எனப்­படும் தேசி­யப் பதி­வுப் பிரிவு ஆகி­யவை இணைந்து நடத்­திய தடுப்பு நட­வ­டிக்­கை­யில் அவர்­கள் கைது­செய்­யப்­பட்­ட­தாக பெர்­னாமா கூறி­யது.

ஊழல் தடுப்பு ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் இத்­த­க­வல்­கள் இடம்­பெற்­றுள்­ள­தாக பெர்­னாமா குறிப்­பிட்­டது.

கைதான குடி­நு­ழைவு அதி­கா­ரி­கள் 30லிருந்து 41 வய­துக்கு உட்­பட்­ட­வர்­கள். கைது­செய்­யப்­பட்ட மற்­ற­வர்­கள் 37லிருந்து 43 வய­துக்கு உட்­ப­பட்­ட­வர்­கள். அவர்­கள் இந்­தோ­னீ­சி­யா­வைச் சேர்ந்த ஊழி­யர்­க­ளுக்கு முக­வர்­க­ளா­கச் செயல்பட்டனர் என்று சொல்­லப்­ப­டு­கிறது.

சந்­தேக நபர்­கள், போலி­யான அடை­யா­ளத்­தைப் பயன்­ப­டுத்தி வெளி­நாட்டு ஊழி­யர்­களை சாபா­வி­லி­ருந்து கோலா­லம்­பூ­ருக்­குக் கொண்டு சேர்க்க அவர்­கள் ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் சுமார் 2,500 ரிங்­கிட் (755 வெள்ளி) கட்­ட­ணம் விதித்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது. வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளைப் பாது­காப்­பாக கோலா­லம்­பூர் அனைத்­து­லக விமான நிலை­யத்­துக்கு அழைத்­துப் போவ­தில் அதி­கா­ரி­களும் ஈடு­பட்­டி­ருந்­த­தாகச் சந்­தே­கி­க்கப்படுகிறது.

தங்­க­ளின் ஐந்து அதி­கா­ரி­கள் கைதா­னதை மலே­சி­யா­வின் குடி­நு­ழை­வுப் பிரிவு வெளி­யிட்ட தனி அறிக்­கை­யில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. சட்­ட­வி­ரோ­த­மாக மலே­சியா வந்த 12 வெளி­நாட்டு ஊழி­யர்­களும் கைது­செய்­யப்­பட்­ட­னர்.

சாபா வழியாக வெளிநாட்டவர் மலேசியாவுக்குள் கடத்தப்பட்டதாகச் சந்தேகம்; கூட்டு நடவடிக்கையில் பலர் கைது