தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜோகூரில் கடும் மழை, திடீர் வெள்ளம்

1 mins read
fc4a9a90-5cbb-477c-a961-5319aad1a532
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் ஜோகூர் மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் பெய்த கன­ம­ழை­யால் அங்குள்ள பல பகு­தி­களில் திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டது. பல­ரின் வீடு­க­ளுக்­குள் வெள்­ளம் புகுந்­த­தா­க­வும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தெரி­வித்­த­னர்.

ஜோகூ­ரில் உள்ள கூலாய் நக­ரில் கிட்­டத்­தட்ட அரை மணி­நே­ரத்­துக்கு மழை பெய்ததால் அங்கு திடீர் வெள்­ளம் ஏற்­பட்­டி­ருக்­கிறது.

ஜோகூ­ரில் இம்­மா­தத் தொடக்­கத்­தில் ஏற்­பட்ட வெள்­ளத்­தால் ஆயி­ரக்­க­ணக்­கா­னோர் தங்­க­ளின் வீடு­க­ளி­லி­ருந்து வெளி­யேற நேரிட்­டது.