தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தொடரும் ஆர்ப்பாட்டம், மெக்ரோன்மீது கடுங்கோபம்

1 mins read
23af395d-f2f2-4709-bd44-7dd35906f97a
-

பாரிஸ்: பிரான்­சில் ஓய்­வு­கால ஊதி­யத் திட்­டத்­துக்­குத் தகு­தி­பெ­றும் வயதை உயர்த்­து­வ­தற்­கான திட்­டத்தை எதிர்த்து மேற்­கொள்­ளப்­படும் ஆர்ப்­பாட்­டங்­கள் தொடர்­கின்­றன. இதை­ய­டுத்து அந்­நாட்­டுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வி­ருந்த பிரிட்­ட­னின் மூன்­றாம் சார்ல்ஸ் மன்­னர் தமது பய­ணத்தை ஒத்­தி­வைத்­துள்­ளார்.

நேற்று முன்­தி­னம் பின்­னி­ர­வி­லும் தொடர்ந்த வன்­மு­றைக்கு எதி­ராக பிரெஞ்சு அதி­பர் இமா­னு­வல் மெக்­ரோன் கண்­ட­னம் தெரி­வித்­தார். ஓய்­வு­கால ஊதி­யத் திட்­டத்­திற்­குத் தகுதிபெறுவதற்கான வயதை உயர்த்­தப்­போ­வ­தாக மெக்ரான் அறி­வித்­த­தைத் தொடர்ந்து பிரான்­சில் பலர் அவர்மீது அதி­ருப்தி அடைந்துள்ளனர்.

ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த காவல்­து­றை­யி­னர் அள­வுக்­க­தி­க­மாக வன்­மு­றை­யில் ஈடு­ப­டு­வ­தாக மனித உரிமை கண்­கா­ணிப்பு அமைப்பு ஒன்று கூறி­யிருக்கிறது.