மாஸ்கோ: பெலரூசில் அணுவாயுதங்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். இவ்வாண்டு ஜூலை மாதத் தொடக்கத்துக்குள் பெலரூசில் அணுவாயுதங்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கான இடம் அமைக்கப்படும் என்று ரஷ்யாவின் 'ரஷ்யா 1' ஊடகத்திடம் திரு புட்டின் கூறினார்.
1990களின் தொடக்கத்திலிருந்து இதுவரை பெலரூசில் அணுவாயுதங்கள் நிறுத்தப்படவில்லை. சோவியத் ஒன்றியம் கலைந்த பிறகு தன்னிடம் இருந்த பேரழிவை ஏற்படுத்தக்கூடிய ஆயுதங்களை ரஷ்யாவிடம் ஒப்படைக்க பெலரூஸ் ஒப்புக்கொண்டது.

