'நோன்புப் பெருநாள் வரை போதுமான கோழிகள் உள்ளன'

'நோன்புப் பெருநாள் வரை போதுமான கோழிகள் உள்ளன'

1 mins read
c1fedacb-9215-4edf-8a2c-639ab2b59abf
-

ஜோகூர் பாரு: அடுத்த மாதம் வரும் நோன்­புப் பெரு­நாள்­வரை மலே­சி­யா­வில் போது­மான அள­வில் கோழி­கள் இருக்­கும் என்று கணிக்­கப்­பட்­டுள்­ளது. மலே­சி­யா­வின் வர்த்­தக, வாழ்க்­கைச் செல­வின அமைச்­சர் சலா­ஹு­தீன் அயுப் இதைத் தெரி­வித்­துள்­ளார்.இது குறித்து பய­னீட்­டா­ளர்­கள் கவ­லைப்­ப­டத் தேவை­யில்லை என்­றும் அவர் கூறி­யுள்­ளார்.

"விலங்கு மருத்­து­வச் சேவைப் பிரி­வி­ட­மி­ருந்து எனக்­குத் தெளி­வான தக­வல்­கள் கிடைத்­துள்­ளன. நோன்­புப் பெரு­நாள் வரை போது­மான கோழி­கள் இருப்­பது அதி­கா­ரத்­து­வப் புள்ளி விவ­ரங்­க­ளின் மூலம் தெரிய வந்­துள்­ளது," என்று நேற்று முன்­தி­னம் நோன்­புப் பெரு­நாள் சந்தை ஒன்­றுக்­குச் சென்­ற­போது திரு சலா­ஹு­தீன் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் சொன்­ன­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் குறிப்­பிட்­டது.

ரம­லான் நோன்பு மாதத்­தி­லும் நோன்­புப் பெரு­நா­ளுக்­குப் பிற­கும் கோழி விற்­ப­னையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணிக்­கு­மாறு தமது அமைச்­சின் அதி­கா­ரி­க­ளுக்கு உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவர் கூறி­னார்.

"அர­சாங்­கம் தொடர்ந்து கோழி இறைச்­சி­யின் விலை­யைக் கட்­டுப்­ப­டுத்­தி­னாலோ ஒரு கிலோ கோழி இறைச்­சிக்கு 9.40 ரிங்­கிட் (2.80 வெள்ளி) என்ற விலை உச்­ச­வ­ரம்பை விதித்­தாலோ அதற்கு இணங்க செயல்­ப­டு­மாறு நான் வர்த்­த­கர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்" என்­றார் திரு சலா­ஹு­தீன்.

"கோழி விநி­யோ­கத்­தில் பிரச்­சி­னையை எதிர்­கொள்­ளும் வர்த்­த­கர்­க­ளுக்­கும் எமது அமைச்­சின் உதவி தேவைப்­ப­டு­வோ­ருக்­கும் கைகொ­டுக்க நாங்­கள் தயா­ராக இருக்­கி­றோம்," என்றும் அவர் சொன்னார்.