மகாதீர்: அன்வார் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நடக்கவில்லை

மகாதீர்: அன்வார் அரசமைப்புச் சட்டத்துக்கு இணங்க நடக்கவில்லை

1 mins read
2f4ffb84-a4de-480a-b953-3a8c667b53c9
-

கோலா­லம்­பூர்: மலே­சியப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மின் அர­சாங்­கம் மலாய் இனத்­த­வ­ரின் ஒற்­று­மைக்­கான பேர­ணியை நடக்­க­வி­டா­மல் செய்­தது, அந்­நாட்­டின் அர­ச­மைப்பு சட்­டத்­திற்கு இணங்க நடக்­கா­த­ செயலாகும் என்று முன்­னாள் பிர­த­மர் மகா­தீர் முகம்­மது சாடி­யுள்­ளார்.

இம்­மா­தம் 19ஆம் தேதி­யன்று நடை­பெ­ற­வி­ருந்த அந்­தப் பேரணி­யில் டாக்­டர் மகா­தீர் கலந்­து­கொள்­ள­வி­ருந்­தார். எனி­னும், பேரணி நடத்த இடம் கிடைக்­கா­த­தால் அதை ரத்து செய்­ய­வேண்­டி­யி­ருந்­தது.

திரு அன்­வா­ரின் ஆட்­சி­யில் மலாய் இனத்­த­வ­ருக்­குப் போது­மான முக்­கி­யத்­து­வம் வழங்­கப்­ப­ட­வில்லை என்று சிலர் குறை­கூறி வரு­கின்­ற­னர். அந்த வகை­யில் மலாய் இனத்­த­வ­ருக்­கான 12 அம்­சங்­கள் அடங்­கிய பிர­க­ட­னத்தைப் பேர­ணி­யில் வெளி­யிடத் திட்­ட­மி­டப்­பட்டிருந்தது.

"இந்­ந­ட­வ­டிக்­கை­யைத் தடுப்­பது, அன்­வா­ரின் அர­சாங்­கம் மத்­திய அமைச்­சின் அர­ச­மைப்­புச் சட்­டத்­தை­யும் அம்னோ கட்­சி­யின் விதி­மு­றை­க­ளை­யும் மறுப்­பதாகும்," என்றார் டாக்டர் மகாதீர்.