இந்தோனீசிய எண்ணெய்க் கப்பலில் தீ; இருவர் பலி

இந்தோனீசிய எண்ணெய்க் கப்பலில் தீ; இருவர் பலி

1 mins read
f9c2299a-b2e7-4b37-b875-7900d9553e41
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யா­வின் எண்­ணெய்க் கப்­பல் ஒன்­றில் தீ மூண்­ட­தால் குறைந்­தது இரண்டு கப்­பல் ஊழி­யர்­கள் மாண்­டு­விட்­ட­னர். ஒரு­வ­ரைக் காண­வில்லை.

மேற்கு நுசா தெங்­காரா மாநி­லத்­தின் மட்­டா­ராம் கடற்­க­ரைக்கு அருகே இச்­சம்­ப­வம் உள்­ளூர் நேரப்­படி நேற்று முன்­தி­னம் பிற்பகல் 2.50 மணிக்கு நிகழ்ந்­தது. மாண்­ட­வர்­கள், காணா­மற்­போ­ன­வர் உட்­பட 17 ஊழி­யர்­கள் இருந்த எம்டி கிரிஸ்டின் எனும் இக்­கப்­பலில் 5,900 கிலோ­லிட்­டர் அளவு எண்­ணெய் இருந்­தது.

சம்பவத்தைத் தொடர்ந்து இது­வரை கட­லில் எண்­ணெய்க் கசிவு ஏதும் ஏற்­ப­ட­வில்லை என்று இந்­தோ­னீ­சிய அர­சாங்­கத்­தின் பெர்த்­தா­மினா எரி­சக்தி நிறு­வனம் தெரி­வித்­தது.