தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அமெரிக்க கடற்படைக் கப்பல் வரும் நேரத்தில் வடகொரிய ஏவுகணை

1 mins read
005db786-7808-46da-95b3-8965a595dfda
-

சோல்: தனது கிழக்­குக் கடற்­கரைக்கு அருகே உள்ள நீர்ப்­பகுதியை நோக்கி வட­கொ­ரியா ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சி­ய­தாக தென்­கொ­ரியா தெரி­வித்­துள்­ளது. ஏவு­க­ணை­கள் நேற்று காலை பாய்ச்சப்பட்டன.

உள்­ளூர் நேரப்­படி காலை சுமார் 7.50 மணிக்கு பாய்ச்­சப்­பட்ட ஏவு­க­ணை­கள் கிட்­டத்­தட்ட 370 கிலோ­மீட்­டர் தூரம் சென்­ற­தாக தென்­கொ­ரிய ராணு­வம் கூறி­யது. அவை ஜப்­பா­னுக்­குச் சொந்­த­மான பொரு­ளி­யல் வட்­டா­ரத்­துக்கு வெளியே விழுந்­த­தாக அந்­நாட்டு அர­சாங்­கம் சொன்­னது.

அமெ­ரிக்­கா­வின் ஆகா­யப் படை விமா­னங்­களை ஏந்­தும் கடற்­ப­டைக் கப்­ப­லான யுஎஸ்­எஸ் நிமிட்சை இன்று தென்­கொ­ரி­யா­வின் பூசான் நக­ரில் உள்ள கடற்­ப­டைத் தளத்­தில் நிறுத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டுள்­ளது. இவ்­வேளை­யில் வட­கொ­ரியா ஏவு­கணை­க­ளைப் பாய்ச்­சி­யுள்­ளது.

பூசா­னில் நிறுத்­து­வ­தற்கு முன்பு யுஎஸ்­எஸ் நிமிட்ஸ், நேற்று தென்­கொ­ரி­யா­வின் தெற்­குக் கடற்­பகுதி­யில் அந்­நாட்டுப் படை­க­ளு­டன் கூட்டு ராணு­வப் பயிற்சி­களை நடத்­தத் திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்­த­து. தென்­கொ­ரிய தற்­காப்பு அமைச்சு இதைத் தெரி­வித்­தது. இப்­ப­டிப்­பட்ட சூழ­லில் ஏவு­க­ணை­கள் பாய்ச்­சப்­பட்­டன.

வட­கொ­ரியா தொடர்ந்து ஏவு­க­ணை­க­ளைப் பாய்ச்­சு­வது ஐக்­கிய நாட்டு நிறு­வ­னத்­தின் பாது­காப்பு மன்­றத் தீர்­மா­னங்­களை மீறு­வ­தா­கும் என்று தென்­கொரியா சுட்­டி­யது. இப்­போக்கை உட­ன­டி­யாக நிறுத்­து­மா­றும் தென்­கொ­ரியா, வட­கொ­ரி­யா­வி­டம் சொன்னது.