தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

அன்வார்: ஆளும் தரப்பினர் மீதும் ஊழல் விசாரணை

2 mins read
090ec6bf-e870-47d9-9f30-4e86cfb59331
-

கோலா­லம்­பூர்: எதிர்த்­த­ரப்பு தலை­வர்­கள் மட்­டு­மல்ல சில அர­சாங்­கத் தலை­வர்­களும் லஞ்ச ஊழல் தொடர்­பாக விசா­ரிக்­கப்­பட்டு வரு­வ­தாக மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கிம் (படம்) தெரி­வித்து உள்­ளார்.

குறிப்­பாக என்­ன­வென்று தெரி­ய­வில்லை. ஆயி­னும் விசா­ரணை வளை­யத்­தில் எதிர்த்­த­ரப்­பி­ன­ரும் அர­சாங்­கத் தரப்­பி­ன­ரும் சிக்கி இருப்­ப­தாக எனக்­குத் தக­வல் சொல்­லப்­பட்­டது.

"அவர்­கள் என்ன பத­வி­யில் உள்­ள­வர்­கள் என்­பது பற்­றி­யெல்­லாம் எனக்­குத் தெரி­யாது. அதி­கா­ரி­க­ளி­டம் இது­பற்­றிக் கேட்­டேன். அவர்­களும் விசா­ரணை நடப்­பது உண்­மை­தான் என்­றார்­கள்," என திரு அன்­வார் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் வாராந்­திர பிர­த­ம­ரின் கேள்வி நேரத்­தின்­போது தெரி­வித்­தார்.

"அவர்­கள்­மீது வழக்­குத் தொடுக்­கப்­பட்­டுள்­ளதா இல்­லையா என்­பது அதி­கா­ரி­கள், குறிப்­பாக தலை­மைச் சட்ட அதி­காரி சம்­பந்­தப்­பட்ட விவ­கா­ரம்," என்­றார் அவர்.

எதிர்த்­த­ரப்பு பெரிக்­காத்­தான் நேஷ­னல் உறுப்­பி­னர் சித்தி ஸைலா முஹம்­மது யூசோஃப் எழுப்­பிய துணை கேள்­விக்­குப் பிர­த­மர் அன்­வார் பதி­ல­ளித்­தார்.

குறிப்­பிட்ட சிலர்­மீது மட்­டும் வழக்கு தொட­ரப்­ப­ட­வில்லை என்­பதை உறுதி செய்ய, விசா­ர­ணை­யில் ஆளும் கட்­சி­யி­ன­ரும் சம்­பந்­தப்­பட்­டுள்­ள­னரா என்­பதை விளக்­கு­மாறு அவர் கேட்­டி­ருந்­தார்.

அதற்­குப் பதி­ல­ளித்த பின்­னர் பேசிய திரு அன்­வார், தமது பிகே­ஆர் கட்­சிக்கு அர­சி­யல் நன்­கொடை அளிக்­கப்­பட்ட விவ­கா­ரம் பற்றி தாரா­ள­மாக விசா­ரணை நடத்­த­லாம் என்று கூறி­னார். அர­சி­யல் கட்­சி­கள் நன்­கொடை பெற சட்­ட­வி­தி­கள் அனு­ம­திக்­கின்­றன.

"ஆனால், இதற்கு முன்­னர் நன்­கொடை என்ற பெய­ரில் ஊழல் நடை­பெற்­றது. அர­சாங்­கக் குத்­த­கை­க­ளைப் பெற்­ற­வர்­கள் கட்­சி­க­ளுக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்­கும் நிதி அளித்­தார்­கள். பிகே­ஆர் கட்­சிக்­கும் நன்­கொடை என்ற பெய­ரில் ஊழல் நடந்­தி­ருப்­ப­தா­கச் சந்­தே­கித்­தால் தாரா­ள­மாக விசா­ரணை நடத்­த­லாம்," என்று திரு அன்­வார் தெரி­வித்­தார்.

முகை­தீன் யாசின் அர­சாங்­கத்­தில் ஊழல் நடை­பெற்­ற­தா­கக் கூறி தங்­கள் கட்­சித் தலை­வர்­கள்­மீது அர­சி­யல் ரீதி­யாக வழக்­குத் தொடுக்­கப்­ப­டு­வ­தாக பெரிக்­காத்­தான் நேஷ­னல் கட்­சித் தலை­வர்­கள் பிர­த­மர் அன்­வார்­மீது குறை­கூறி வரு­கின்­ற­னர்.