தைவான் பதற்றம்: 3 நாடுகள் சந்திப்பு

1 mins read
c0311dcf-7849-40fe-ba91-c5bfba9c0543
-

தோக்­கியோ: பாது­காப்பு அம்­சங்­கள் மீதான உயர்­மட்ட அமைச்­சர்­நி­லைப் பேச்சு நடத்­து­வ­தற்­காக முறை­யான கட்­ட­மைப்பு ஒன்றை உரு­வாக்க அமெ­ரிக்கா, ஜப்­பான் மற்­றும் பிலிப்­பீன்ஸ் ஆயத்­த­மாகி வரு­வ­தாக கியோடோ செய்தி நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது. இந்த மூன்று நாடு­களும் தங்­க­ளது முதல் கூட்­டத்தை ஏப்­ரல் முதல் வாரத்­தில் நடத்­தத் திட்­ட­மி­டு­வ­தா­க­வும் அது கூறி­யது. ஜப்­பா­னுக்­கும் பிலிப்­பீன்­சுக்­கும் இடை­யில் அமைந்­தி­ருக்­கும் தைவான் மீது சீன ராணு­வம் அதி­க­மா­கக் கவ­னம் செலுத்தி வரும் நிலை­யில் இப்­ப­டி­யொரு சந்­திப்பு நடை­பெ­று­கிறது. தைவானை நோக்­கிய சீனா­வின் ராணுவ நட­மாட்­டம் போருக்கு இட்­டுச் செல்­லக்­கூ­டும் என்று வாஷிங்­ட­னும் தோக்­கி­யோ­வும் கவலை தெரி­வித்­துள்­ளன.