கியுடேட் ஜுவாரெஸ்: மெக்சிகோ-அமெரிக்க எல்லை நகரான கியுடேட் ஜுவாரெஸில் உள்ள வெளிநாட்டினர் தங்குமிடம் தீப்பிடித்து எரிந்ததில் 39 பேர் மாண்டனர். அங்கு மத்திய, தென் அமெரிக்காவைச் சேர்ந்த 68 ஆடவர்கள் தங்கியிருந்தனர். தீயில் மேலும் 29 பேருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது. அவர்கள் நான்கு வெவ்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாக மெக்சிகோவின் தேசிய புலம்பெயர்ந்தோர் கழகம் கூறியது. அமெரிக்காவும் மெக்சிகோவும் தங்களது எல்லையில் ஊடுருவலைத் தடுக்க முயன்றுவரும் வேளையில் இத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
39 பேர் தீயில் கருகி மாண்டனர்
1 mins read
-

