பேருந்து கவிழ்ந்து எரிந்தது: 20 உம்ரா யாத்திரிகர்கள் மரணம்

பேருந்து கவிழ்ந்து எரிந்தது: 20 உம்ரா யாத்திரிகர்கள் மரணம்

1 mins read
052f5b66-36c8-43af-b07b-41b6dbf5a06f
-

ரியாத்: உம்ரா யாத்­தி­ரைக்­காக மெக்கா சென்­ற­போது பேருந்து விபத்­துக்­குள்­ளாகி 20 பேர் இறந்­து­விட்­ட­தா­க­வும் 29 பேர் காய­ம­டைந்­த­தாகவும் சவூதி அரே­பிய ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன. தென்­மா­நி­ல­மான ஆசி­ரில் திங்­கட்­கி­ழமை (மார்ச் 27) நிகழ்ந்த இவ்­வி­பத்­தில் உயி­ரி­ழப்பு எண்­ணிக்கை மேலும் உய­ரக்­கூ­டும் என அஞ்­சப்­ப­டு­கிறது.

பேருந்­தில் பய­ணம் செய்­த­வர்­கள் உள்­நாட்­டி­ன­ரும் வெளி­நாட்­ட­வர்­களும் அடங்­கு­வர். மலைப்­ப­கு­தி­யில் ஒரு பாலத்­தின்­மீது பேருந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது அதன் நிறுத்­து­க்க­ருவி (பிரேக்) செயல்­ப­ட­வில்லை எனக் கூறப்­பட்­டது. அத­னால், பாலத்­தின் தடுப்­புச்­சு­வர்­மீது மோதிய பேருந்து, பின்­னர் தலை­குப்­பு­றக் கவிழ்ந்து, தீப்­பி­டித்­த­தாக உள்­ளூர் ஊட­கச் செய்­தி­கள் கூறின.காய­ம­டைந்த பய­ணி­கள் சிகிச்­சைக்­காக மருத்­து­வ­ம­னை­க­ளுக்­குக் கொண்­டு­செல்­லப்­பட்­ட­னர்.

புனித ரம­லான் மாதம் தொடங்கிவிட்ட நிலை­யில், உம்ரா சம­யக் கட­மை­யாற்ற உல­கெங்­கும் இருந்­தும் ஏரா­ள­மான முஸ்­லிம்­கள் மெக்­கா­வில் திரள்­வது வழக்­கம்.