பெய்ஜிங்: தனக்குப் பிடிக்காதவர்களை மற்றவர்கள் சந்திக்கக் கூடாது என்ற எண்ணத்தில் செயல்படும் சீனா, தனக்குப் பிடிக்காத தைவான் அதிபரை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் நாயகர் கெவின் மெக்கார்த்தி சந்தித்தால் அதற்குரிய பதிலடித் தரப்படும் என்று எச்சரித்துள்ளது.
தைவான் அதிபர் சாய் இங் வென் இடைவழிப் பயணமாக அமெரிக்கா செல்ல திட்டமிட்டுள்ளார். அப்போது அவரை அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பார்கள் என்ற எதிர்பார்ப்புக்கிடையே சீனாவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.
அத்தகைய நடவடிக்கை ஆத்திரமூட்டும் செயல் என்றும் அது தெரிவித்தது.
ஜனநாயக முறையில் ஆட்சி நடைபெறும் தைவானை தனக்குச் சொந்தமான பகுதி என்று சீனா தொடர்ந்து உரிமை கோரி வருகிறது.
இந்த நிலையில் அமெரிக்க அதிகாரிகள் அவரைச் சந்தித் தால் அது தைவானை தனி நாடாக அங்கீகரிப்பதற்கான ஆதரவாகக் கருதப்படும் என்று சீனா தெரிவித்தது.
கடந்த 2022 ஆகஸ்ட் மாதத்தில் அப்போதைய அமெரிக்க நாடாளுமன்ற நாயகர் நேன்சி பெலோசி தைவானுக்குச் சென்றபோது சீனா, தனது போர் வலிமையைக் காட்டி அச்சுறுத்தியது. தைவானைச் சுற்றி போர்ப் பயிற்சி களை நடத்தி மிரட்டும் தோரணையில் அது நடந்துகொண்டது.
இதற்கிடையே அதிபர் சாய் இங் வென் வெளிநாட்டில் இருக்கும்போது சீனாவின் நடவடிக்கைகள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும் என்று தைவானின் ஆயுதப்படைகள் அறிவித்துள்ளன.
குவாட்டமாலா, பெலீஸ் நாடுகளுக்கு நியூயார்க் வழியாகச் சென்று லாஸ் ஏஞ்சலிஸ் வழியாக தாயகம் திரும்புவது அதிபர் சாயின் திட்டமாகும்.
கலிஃபோர்னியாவில் அவர் கெவின் மெக்கார்த்தியை சந்திக் கலாம் என்று கூறப்படுகிறது. இதனை இருநாடுகளும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.
பெய்ஜிங்கில் பேசிய சீனாவின் தைவான் விவகார அலுவலகப் பேச்சாளரான ஷு ஃபெங்லியான், "அமெரிக்கா வழியாகச் செல்லும் திருமதி சாய் ஹோட்டலில் தங்குவதோ விமான நிலையத்தில் காத்திருப்பதோ திட்ட மல்ல. ஆனால் அமெரிக்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களை அவர் சந்திக்க உள்ளார்.
"நாயகர் மெக்கார்த்தியை அவர் சந்தித்தால் அது மற்றோர் ஆத்திரமூட்டும் செயலாகக் கருதப்படும். இது, தைவான் நீரிணையில் அமைதியைப் பாதிக்கும்," என்று கூறினார்.

