பெர்த்தாமினா சுத்திகரிப்பு ஆலையில் வெடிப்பு; 9 பேர் காயம்

2 mins read
6d9e16cd-57cf-41d4-8450-29b5f5555dcf
-

ஜகார்த்தா: மேற்கு இந்­தோ­னீ­சி­யா­வில் எரி­சக்தி நிறு­வ­ன­மான பெர்த்­தா­மி­னா­வில் ஏற்­பட்ட வெடிப்பு கார­ண­மாக ஒன்­பது பேர் காய­ம­டைந்­த­னர் என்று அந்த நிறு­வ­னம் நேற்று தெரி­வித்­தது.

இந்­தச் சம்­ப­வம் இதற்கு முன்­னர், கடந்த மாதம் நிகழ்ந்த இரண்டு தீ விபத்­து­களில், பலர் இறந்­த­தைத் தொடர்ந்து நிகழ்ந்­துள்­ளது என்பது இங்கு நினை­வு­கூ­ரத்­தக்­கது.

இது குறித்து அறிக்கை வெளி­யிட்ட பெர்த்­தா­மினா நிறு­வ­னம், இந்­தோ­னீ­சி­யா­வின் சுமத்ரா தீவில் உள்ள டுமாய் என்ற நக­ரத்­தில் சனிக்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்த வெடிப்­புச் சம்­ப­வத்­தில் சித­றிய கண்­ணா­டித் துகள்­க­ளால் பல­ருக்கு இலே­சான காயம் ஏற்­பட்­ட­தா­கக் கூறி­யது. அத்­து­டன் அந்­ந­க­ரில் உள்ள பல வீடு­க­ளுக்­கும் சேதம் ஏற்­ப­டுத்­தி­ய­தாக அறிக்கை விளக்­கி­யது.

வெடிப்­பிற்­கான கார­ணம் குறித்து விசா­ரணை நடை­பெற்று வரு­வ­தாக நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

முன்­ன­தாக, ஜகார்த்­தா­வில் உள்ள பெர்த்­தா­மினா எண்­ணெய் நிறு­வன முனை­யத்­தில் மார்ச் மாதம் 3ஆம் தேதி நிகழ்ந்த தீ விபத்­தில் 20க்கும் மேற்­பட்­டோர் மர­ணம் அடைந்­த­னர் என்று ராய்ட்­டர்ஸ் செய்­தித் தக­வல் கூறு­கிறது.

பின்­னர், மார்ச் மாதம் 26ஆம் தேதி பாலி தீவுக்­கும் இந்­தோ­னீ­சி­யா­வின் லோம்­போக் பகு­திக்­கும் நிறு­வ­னத்­தின் எண்­ணெய்யை ஏற்­றிச் சென்ற கப்­பல் தீப்பிடித்­த­தில் மூவர் மர­ண­ம­டைந்­த­னர். சனிக்­கி­ழமை நடந்த விபத்­துக்கு மன்­னிப்­புக் கேட்­டுக்­கொண்ட பெர்த்­தா­மினா நிறு­வ­னம் தீ அணைக்­கப்­பட்டு விட்­ட­தா­க­வும் அதைத் தொடந்து மீட்பு நட­வ­டிக்­கை­கள் இடம்­பெற்று வரு­வ­தா­க­வும் கூறி­யது.

தீயி­னால் நிறு­வ­னத்­தின் பல பகு­தி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் இவை தவிர மற்ற பகு­தி­கள் வழக்­கம்­போல் செயல்­பட்டு வரு­வ­தா­க­வும் பெர்த்­தா­மினா நிறு­வ­னம் விளக்­க­ம­ளித்­தது.

இந்­தத் தீச் சம்­ப­வத்­தால் எண்­ணெய் உற்­பத்தி, விநி­யோ­கம் பாதிக்­க­ப்­ப­டுமா என்ற கேள்­விக்கு உட­ன­டி­யாக நிறு­வ­னத்­தின் பேச்­சா­ளர் பதி­ல­ளிக்­க­வில்லை.

எனி­னும், எண்­ணெய் இருப்­பில் பாதிப்­பில்லை என்று அவர் சொன்­ன­தாக ராய்ட்­டர்ஸ் செய்தி கூறு­கிறது.