மதுப்பிரியர்களால் ரயில்களில் வாந்தி சம்பவங்கள் அதிகரிப்பு

மதுப்பிரியர்களால் ரயில்களில் வாந்தி சம்பவங்கள் அதிகரிப்பு

1 mins read
7ac3b5a9-e7f0-4b86-8635-8d0ab3044201
-

சோல்: தென்­கொ­ரி­யா­வின் சோல் நகர சுரங்க ரயில் நிலை­யங்­க­ளி­லும் ரயில்­க­ளி­லும் அன்­றா­டம் சரா­ச­ரி­யாக 13 வாந்தி சம்­ப­வங்­கள் புகார் அளிக்­கப்­படு­வ­தாக அந்த ரயில் தடத்தை இயக்­கும் சோல் மெட்ரோ தெரி­வித்­தள்­ளது.

2020ஆம் ஆண்­டில் இருந்து வாந்தி சம்­ப­வங்­கள் தொடர்­பாக 13,928 புகார்­கள் வந்­துள்­ளன. ஆய்­வின்­படி, வெள்­ளிக்­கி­ழ­மை,­சனிக்­கி­ழ­மை­களில் அதிக வாந்தி சம்­ப­வங்­கள் புகார் அளிக்­கப்­ப­டு­கின்­றன. 69.4 விழுக்­காட்டு சம்­ப­வங்­கள் இரவு 9 மணிக்கு மேல் நடப்­பதைத் தர­வு­கள் காட்­டு­கின்­றன.

பெரும்­பா­லான கிரு­மிப் பர­வல் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்ட ஏப்­ரல் 2022ல் இந்த புகார் எண்­ணிக்கை ஆக அதி­க­மாக இருந்­தது.

மது விருந்­திற்­குப் பிறகு வீடு திரும்­பும் பய­ணி­க­ளால் அதிக வாந்தி சம்­ப­வங்­கள் புகார் அளிக்­கப்­ப­டு­வ­தாக சோல் மெட்ரோ நம்­பு­கிறது.