பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தானின் புதிய நடவடிக்கை

1 mins read
5810dca7-1546-4cbd-8d3e-90a42895725e
-

இஸ்­லா­மா­பாத்: இஸ்­லா­மிய பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக பாகிஸ்­தான் ராணுவ நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வி­ருப்­ப­தாக அந்­நாட்­டின் தேசிய பாது­காப்­புக் குழு தெரி­வித்­துள்­ளது. பொரு­ளி­யல் ரீதி­யா­க­வும் அர­சி­யல் ரீதி­யா­க­வும் பெரும் நெருக்­க­டியை எதிர்­கொண்­டு­வ­ரும் பாகிஸ்­தா­னில் இந்­ந­ட­வ­டிக்­கை­யால் நிலைமை மேலும் மோச­ம­டை­யும் என்று அஞ்­சப்­ப­டு­கிறது.

பாகிஸ்­தா­னில் மாநி­லத் தேர்­தல்­களை அடுத்த மாதம் நடத்த மத்­திய அர­சாங்­கத்து நெருக்­கு­தல் இருந்து வருகிறது. தேர்­தலை ஒத்­தி­வைக்க அர­சாங்­கம், பயங்­க­ர­வாத எதிர்ப்பு நட­வ­டிக்­கையை ஒரு கார­ண­மா­கப் பயன்­ப­டுத்­திக்­கொள்­ளக்­கூ­டும் என்று கவ­னிப்­பா­ளர் ஒரு­வர் குறிப்­பிட்­டார்.

இதற்கு முன்பு 2014ஆம் ஆண்டில் பாகிஸ்­தான் பயங்­க­ர­வா­தி­க­ளுக்கு எதி­ராக முழு­வீச்­சில் நட­வ­டிக்ைக ேமற்­கொண்­டது. அப்­போது அந்­நாட்­டுக்கு பில்­லி­யன் கணக்­கான டாலர் இழப்பு ஏற்­பட்­டது.

அதோடு, ஒரு மில்­லி­ய­னுக்­கும் அதி­க­மா­னோர் தங்­கள் வசிப்பிடங்களிலிருந்து வெளி­யேற்­றப்­பட்­ட­னர், நூற்­றுக்­கணக்­கா­னோர் மாண்­ட­னர்.