கோலாலம்பூர்: தம்மீது சுமத்தப்பட்டுள்ள ஊழல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யவைக்கும் முயற்சியில் மலேசியாவின் துைணப் பிரதமர் ஸாகிட் ஹமிடி இறங்கியுள்ளார். அந்தக் கோரிக்கையை விளக்கும் கடிதத்தை அவர் தலைமை சட்ட அதிகாரியின் அலுவலுகத்துக்கு அனுப்பி வைத்துள்ளார்.
நேற்று தொடரவிருந்து நீதிமன்ற விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. வழக்கு தொடர்பான புதிய தகவல்களும் ஆதாரங்களும் கிடைத்துள்ளதால் நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்குமாறு திரு ஸாகிட் கோரிக்கை விடுத்தார்.
200 பக்கங்களுக்கும் மேல் இருக்கும் அந்தக் கடிதம் தலைமைச் சட்ட அதிகாரி இட்ருஸ் ஹருணுக்கு அனுப்பப்பட்டதாக திரு ஸாகிட்டின் வழக்கறிஞர் ஹமிடி முகம்மது நோ உறுதிப்படுத்தினார்.
நீதிமன்ற விசாரணையை ஒத்திவைக்க அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மறுப்புத் தெரிவிக்கவில்லை என்றும் அவர் சொன்னார்.
கொலின் லாரன்ஸ் செக்குவேரா எனும் நீதிபதி விசாரணையை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டார். நீதிமன்ற விசாரணைவரும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. திரு ஸாகிட், 47 குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார். அவற்றில் எட்டு ஊழல் குற்றச்சாட்டுகள், 27 கள்ளப் பணத்தை நல்லப் பணமாக்குவது தொடர்பானவை, 12 நம்பிக்கை மோசடி சார்ந்தவை.
ஊழல் குற்றச்சாட்டுகளைத் தள்ளுபடி செய்யவைக்க ஸாகிட் முயற்சி

