பாரிஸ்: பிரான்சின் மோன்ட் பிளாங்க் மலைக்கு அருகே நிகழ்ந்த பனிச்சரிவில் குறைந்தது அறுவர் மாண்டுவிட்டனர்.
முதலில் நால்வர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அதற்குப் பிறகு ஆகக் கடைசி நிலவரப்படி மேலும் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
மாண்டோரில் இருவர் மலையேறுவோரை வழிநடத்தும் பணியில் இருப்பவர்கள். அவர்கள் வழிநடத்திய மலையேற்றத்தில் ஈடுபட்ட நால்வரும் மாண்டனர்.

