எட்டு பேரின் உயிரைப் பறித்த விபத்து; கார் ஓட்டுநர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு

எட்டு பேரின் உயிரைப் பறித்த விபத்து; கார் ஓட்டுநர் குற்றமற்றவர் எனத் தீர்ப்பு

2 mins read
a25d63eb-8bc7-4c4b-b06d-f593d8e56bb1
-
multi-img1 of 2

புத்­ரா­ஜெயா: ஆறு ஆண்­டு­களுக்கு முன்பு ஜோகூ­ரில் எட்டு பதின்­ம­வ­ய­தி­ன­ரின் உயி­ரைப் பறித்த கோர விபத்­து­டன் தொடர்­பான கார் ஓட்­டு­நர், குற்­ற­மற்­ற­வர் என்று மலே­சிய மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றம் நேற்று தீர்ப்­ப­ளித்­தது.

இதை­ய­டுத்து, 28 வயது திருவாட்டி சேம் கி டிங் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளார்.

2017ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் 18ஆம் தேதி அதி­காலை 3.20 மணி அள­வில் அந்த விபத்து நிகழ்ந்­தது.

சட்­ட­வி­ரோ­த­மாக மாற்­றி அமைக்­கப்­பட்­டி­ருந்த மிதி­வண்டி­க­ளை இளை­யர்­கள் பலர் ஓட்­டிக்­கொண்­டி­ருந்­த­னர்.

அவர்­க­ளது மிதி­வண்­டி­களில் பிரேக், விளக்­கு­கள் அகற்­றப்­பட்­டி­ருந்­தன. அது­மட்­டு­மல்­லாது, மிதி­வண்­டி­க­ளின் கைப்­பி­டி­களும் தாழ்த்­தப்­பட்­டி­ருந்­தன.

அப்­போது அந்­தச் சாலை­யில் போது­மான வெளிச்­சம் இல்லை என்றும் நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

திரு­வாட்டி சேமின் கார் மோதி­ய­தில் எட்டு இளை­யர்­கள் மாண்­ட­னர். அவர்­கள் 13 வய­துக்­கும் 16 வய­துக்­கும் இடைப்­பட்­ட­வர்­கள்.

கீழ் நீதி­மன்­றத்­தில் நடை­பெற்ற முதல் வழக்கு விசா­ர­ணை­யில் விபத்து நிகழ்ந்­த­போது திரு­வாட்டி சேம் மது அருந்­தி­யிருக்­க­வில்லை என்­றும் அவர் வேக வரம்­புக்கு உட்­பட்டு கார் ஓட்­டி­ய­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆனால் அதை எதிர்த்து அர­சாங்க வழக்­க­றி­ஞர்­கள் மேல்­முறை­யீடு செய்­த­னர்.

திரு­வாட்டி சேம் கவ­னக்­குறை­வு­டன் வாக­னம் ஓட்­டி­ய­தாக உயர் நீதி­மன்­றத்­தில் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது. அவ­ருக்கு ஆறு ஆண்­டு­கள் சிறைத் தண்­ட­னை­யும் 6,000 ரிங்­கிட் அப­ரா­த­மும் விதிக்­கப்­பட்­டன.

திரு­வாட்டி சேமுக்­குத் தண்­டனை விதிப்­ப­தன் மூலம் சாலை­களில் சட்­ட­வி­ரோத மிதி­வண்­டிப் பந்­த­யங்­களில் ஈடு­ப­வது ஏற்­றுக்­கொள்­ளப்­ப­டு­வ­தாக இளை­யர்­களுக்­குத் தவ­றான புரி­தல் ஏற்­படும் என்று மலே­சி­யர்­கள் பலர் அதி­ருப்­திக் குரல் எழுப்­பி­னர்.

இந்­நி­லை­யில், இந்த வழக்கு மேல்­மு­றை­யீட்டு நீதி­மன்­றத்­துக்­குக் கொண்டு செல்லப்பட்டது.

திரு­வாட்டி சேம் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டு முறை­யற்­றது, தவ­றா­னது என்று மூன்று நீதி­பதி­களைக் கொண்ட அமர்வு ஒரும­ன­தா­கக் கூறி­யது.

எனவே, அவர் குற்­ற­மற்­ற­வர் என்றும் அவர் விடு­விக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.

விபத்­தில் உயி­ரி­ழப்பு ஏற்­பட்­டால் அது கார் ஓட்­டு­ந­ரின் தவறு என்று கண்­மூ­டித்­த­ன­மா­கக் கூறி­வி­டக்­கூ­டாது என்று நீதி­ப­தி­கள் கூறி­னர்.

விடு­தலை செய்­யப்­பட்ட பிறகு, திரு­வாட்டி சேம் செய்­தி­யா­ளர்­களி­டம் பேசி­னார்.

விடு­தலை செய்­யப்­பட்­டா­லும் இளை­யர்­க­ளின் உயி­ரி­ழப்­பால் தாம் தொடர்ந்து மிகக் கடு­மை­யான மன­வு­ளைச்­ச­லால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

தாம் ஓட்­டிச் சென்ற கார் அவர்­கள் மீது மோதி அவர்­களுக்கு மர­ணம் விளை­வித்­த­போ­தி­லும் அதை வேண்­டு­மென்றே செய்­ய­வில்லை என்­றார் அவர்.

மாண்ட ஒவ்­வோர் இளை­ய­ரின் பெய­ரைச் சொல்லி அவர்­களது குடும்­பங்­க­ளி­டம் அவர் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­டார்.

விபத்தால் ஏற்பட்ட பெரும் சுமை, சோகத்தைத் தாமும் சுமப்பதாக அவர் கூறினார்.