யங்கூன்: மியன்மாரின் மத்தியப் பகுதியில் அந்நாட்டு ராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 50 பேர் மாண்டதாக செய்திநிறுவனங்களும் போராளி அமைப்பு ஒன்றும் தெரிவித்துள்ளன.
மியன்மாரை ஆட்சி செய்யும் ராணுவத்தை எதிர்ப்பவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி ஒன்றைக் குறிவைத்துத் தாக்குதல் நடத்தப்பட்டதாக அறியப்படுகிறது.
தாக்குதல் காரணமாக 50லிருந்து 100 பேர் மாண்டதாக தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைச் சேர்ந்த மக்கள் கூறியதாக பர்மிஸ் ரேடியோ ஃபிரீ ஏஷியா எனும் வானொலி ஒலிவழியில் தெரிவிக்கப்பட்டது.
மாண்டவர்களில் பொதுமக்களும் அடங்குவர் என்று நம்பப்படுகிறது. இதுகுறித்து மியன்மார் ராணுவம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டது.

