சோல்: தென்கொரியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள காங்னியுங் நகரில் காட்டுத் தீ ஏற்பட்டுள்ளதாகவும் பலத்த காற்று, வறண்ட வானிலை ஆகியவை காரணமாக அது மிக வேகமாகப் பரவி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக அந்நகரில் வசிக்கும் ஏறத்தாழ 500 பேர் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தென்கொரிய நேரப்படி நேற்று காலை 8.30 மணி அளவில் காட்டுத் தீ ஏற்பட்டது.
அதை அணைக்க தீயணைப்புப் படையினர் சிரமப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஹெலிகாப்டர் மூலம் நீர் பீய்ச்சியடிக்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
ஆனால் பலத்த காற்று காரணமாக திட்டமிட்டபடி செயல்பட முடியவில்லை என்று தென்கொரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீப்பற்றி எரியும் வனப்பகுதிக்கு அருகில் உள்ள வீடு எரிந்து சாம்பலானது. படம்: ராய்ட்டர்ஸ்

