விளாடிவோஸ்டோக்: ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள ஷிவெலுச் எரிமலை நேற்று வெடித்தது.
இதன் விளைவாக எரிமலையிலிருந்து பெருமளவிலான சாம்பல் வெளியேறியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக அப்பகுதியில் விமானங்கள் பறக்கக்கூடாது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய நேரப்படி நேற்று நள்ளிரவு எரிமலை வெடித்தது.
வழிந்தோடிய எரிமலைக் குழம்பு அப்பகுதியில் இருந்த பனிக்கட்டிகளை உருக்கியது.
அருகில் இருக்கும் நெடுஞ்சாலைக்குள் எரிமலை வழிந்தோடக்கூடும் என்று எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டது.
எரிமலையிலிருந்து வெளியேறிய சாம்பல் காரணமாக அருகில் உள்ள கிராமங்களில் தரையைக்கூட பார்க்க முடியவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. 8.5 செண்டிமீட்டர் உயரத்துக்குச் சாம்பல் குவிந்துகிடப்பதாகவும் கடந்த 60 ஆண்டுகளில் இப்படி ஒரு நிலை அப்பகுதிகளில் ஏற்பட்டதில்லை என்றும் அதிகாரிகள் கூறினர்.

