தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மியன்மார் ராணுவம்: தாக்குதலை நாங்கள்தான் நடத்தினோம்

1 mins read
4c8733e5-eca3-43f8-b1a7-188d11c88efb
-

நேப்­பிடோ: மியன்­மா­ரில் பல­ரைப் பலி­வாங்­கிய ஆகா­யப் படைத் தாக்­கு­தலை மேற்­கொண்­டதை அந்­நாட்டு ராணு­வம் ஒப்­புக்­கொண்­டுள்­ளது. மேலும், அந்­தத் தாக்­கு­தல் பொது­மக்­க­ளைப் பலி­வாங்­கி­யி­ருந்­தால் அவர்­கள் பயங்­க­ர­வா­தி­கள் என்று வகைப்­ப­டுத்­தப்­பட்­டோ­ருக்கு உதவ கட்­டாயப்­படுத்­தப்பட்­ட­வர்­க­ளாக இருப்­பர் என்­றும் ராணு­வம் கூறி­யது.

சாகாய்ங் எனும் பகு­தி­யில் உள்ள பாஸிக்யி என்­ற­ழைக்­கப்­படும் கிரா­மத்­தின்­மீது மியன்­மார் ராணு­வம் நேற்று முன்­தி­னம் மேற்­கொண்ட ஆகா­யப் படைத் தாக்­கு­த­லில் சிறு­வர்­கள் உட்­பட குறைந்­தது 50 பேர் மாண்­ட­தாக சில ஊட­கங்­கள் தெரி­வித்­தன. சம்­ப­வத்தை நேரில் கண்ட ஒரு­வ­ரும் ஏஎ­ஃப்பி செய்தி நிறு­வ­னத்­தி­டம் தக­வல் தெரி­வித்­தார்.

ஐக்­கிய நாட்டு நிறு­வ­ன­மும் மேற்­கத்­திய நாடு­களும் இந்­தத் தாக்­கு­த­லுக்கு எதி­ரா­கக் கண்­ட­னம் தெரி­வித்­த­னர்.

'என்­யுஜி' எனப்­படும் முன்­னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளைக் கொண்ட தேசிய ஒரு­மைப்­பாட்டு அர­சாங்­கக் குழு நடத்­திய சந்­திப்­பைக் குறி­வைத்து தாக்­கு­தல் நடத்­தப்­பட்­டது. வட்­டா­ரத்­தில் மீண்­டும் அமை­தி­யை­யும் நிலைத்­தன்­மை­யை­யும் கொண்­டு­வ­ரும் நோக்­கு­டன் அந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­ட­தாக மியன்­மார் ராணுவ அர­சாங்­கத்­தின் பேச்­சாளர் ஸாவ் மின் துன் ராணு­வத் தெலைக்­காட்சி ஒன்­றில் கூறி­னார்.

2021ஆம் ஆண்டு பிப்­ர­வரி மாதம் மியன்­மார் ராணு­வம் ஆட்சியை வலுக்­கட்­டா­ய­மா­கக் கைப்­பற்­றி­யது, அன்றிலிருந்து அந்­நாட்­டில் குழப்­ப­நிலை தொடர்­கிறது.