விலங்குகளைத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட மலேசிய இளையர்

விலங்குகளைத் துன்புறுத்தியதை ஒப்புக்கொண்ட மலேசிய இளையர்

1 mins read
f0039fa5-a47c-48e8-9579-0945e9e4d2d3
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வில் சென்ற மாதம் நாய் ஒன்­றுக்­குத் தீ வைத்த 18 வயது இளை­யர் விலங்­கு­க­ளைத் துன்­பு­றுத்­தி­ய­தாகத் தன்­மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டை ஒப்­புக்­கொண்­டுள்­ளார். ஜோகூர் பாரு­வின் அமர்வு நீதி­மன்­றத்தில் 18 வயது பிரே­டன் யாப் ஹோங் ஷெங் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

யாப், பெண் நாய் ஒன்றை அடித்து, தீ வைத்து அதற்­குத் தாங்­கிக்­கொள்ள முடி­யாத வலியை ஏற்­ப­டுத்­தி­ய­தாக குற்­றப் பத்­தி­ரி­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டிருந்தது.

அச்­சம்­ப­வம் சென்ற மாதம் 27ஆம் தேதி­யன்று ஜோகூ­ரின் தாமான் ஜாலான் இம்­பி­யாஸ் எமாஸ் 22 பகு­தி­யில் நிகழ்ந்­தது.