தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஜேஜுவில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட தென்கிழக்காசியர்கள்

1 mins read
0160c795-ac86-49b4-8eeb-97bfde223835
-

சோல்: பிடித்­து­வைக்­கப்­பட்­டு இருந்த நான்கு தென்­கி­ழக்­கா­சி­யப் பெண்­கள் தென்­கொ­ரி­யா­வின் பிரபல சுற்றுலாத்தலமான ஜேஜு தீவில் வலுக்கட்டாயமாக பாலியல் தொழி­லுக்­குத் தள்­ளப்­பட்டனர். பெண்­க­ளைப் பிடித்­து­வைத்­த­தா­கச் சந்­தே­கிக்­கப்­படும் நால்வர் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­தாக உள்­ளூர் காவல்­துறை­யி­னர் தெரி­வித்­த­னர்.

அப்பெண்­கள் வேலை பார்ப்­பதற்­காக சென்ற ஆண்டு நவம்­பர் மாதம் தென்­கொ­ரியாவுக்குச் சென்­ற­னர். ஜேஜுவில் உள்ள உணவகங்களில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி குடிநுழைவு முகவர் ஒருவர் அப்பெண்களை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.