டெஹ்ரான்: அண்மையில் சிரியாவை நிலநடுக்கம் உலுக்கியதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளை ஈரான் தவறாகப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது. நிவாரணப் பணிகளின் மூலம் தனது பங்காளி நாடான சிரியாவுக்கு ஈரான் ஆயுதங்களையும் ராணுவக் கருவிகளையும் வழங்கியதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சிரியா, ஈரான், இஸ்ரேல், மேற்கத்திய நாடுகள் ஆகியவற்றைச் சேர்ந்தோர் இத்தகவலை ராய்ட்டர்சிடம் தெரியப்படுத்தியிருக்கின்றனர். சிரியாவில் இஸ்ரேலுக்கு எதிராகத் தன்னைக் கூடுதலாகத் தற்காத்துக்கொள்ளவும் சிரிய அதிபர் பஷார் அல்-அசாத்தின் நிலைமையை வலுப்படுத்தவும் இவ்வாறு செய்யப்பட்டதாக ராய்ட்டர்சுக்குத் தகவல் அளிக்கப்பட்டது.
கடந்த பிப்ரவரி மாதம் ஆறாம் தேதியன்று துருக்கியையும் சிரியாவையும் மோசமான நிலநடுக்கம் உலுக்கியது. 44,000க்கும் அதிகமானோர் அதில் உயிரிழந்தனர்.

