தைப்பே: தைவானின் வடக்குப் பகுதியில் நாளை மறுநாள் ஆகாயப் போக்குவரத்துக்கு சீனா தடை விதிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்நடவடிக்கையால் சுமார் 33 விமானச் சேவைகள் பாதிக்கப்படும் என்று தைவானின் 'சிஎன்ஏ' எனப்படும் சென்ட்ரல் நியூஸ் ஏஜன்சி ஊடகம் கூறியுள்ளது.
தைவானின் போக்குவரத்து அமைச்சர் வாங் குவோ-சாய் இதைத் தெரிவித்ததாக அது குறிப்பிட்டது. ஆகாயப் போக்குவரத்துத் தடையால் விமானச் சேவைகளுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு பெரிய அளவில் குறைக்கப்பட்டுள்ளதாக திரு வாங் கூறியிருந்தார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
நாளை மறுநாள் முதல் வரும் செவ்வாய்க்கிழமை வரை ஆகாயப் போக்குவரத்துத் தடையை விதிக்கப்போவதாக முதலில் பெய்ஜிங், தைப்பேயிடம் கூறியிருந்தது.
தைப்பே அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து நாளை மறுநாள் காலை 27 நிமிடங்களுக்கு மட்டும் தடை செயல்படுத்தப்படும் என்று தைவானின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்தது.

