டெக்சஸ் பண்ணை வெடிப்பு: 18,000 மாடுகள் மரணம்

1 mins read
8b0a67d2-3d54-45f9-b8c4-7294bb710bae
-

ஆஸ்­டின்: அமெ­ரிக்­கா­வின் டெக்­சஸ் மாநி­லத்­தில் உள்ள பால் பண்ணை ஒன்­றில் வெடிப்பு நிகழ்ந்­த­தால் 18,000 மாடு­கள் மாண்­டு­விட்­டன. இந்த எண்­ணிக்கை, அமெ­ரிக்­கா­வில் தின­முத் வதைக்­கப்­படும் மாடு­களில் கிட்­டத்­தட்ட மும்­ம­டங்கு என்று 'யுஎஸ்ஏ டுடே' ஊட­கத்­தில் வெளி­யான அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

இச்­சம்­ப­வம் 'சவுத் ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்' பால் பண்­ணை­யில் நிகழ்ந்­தது. அதற்கு ஆக அரு­கில் உள்ள டிமிட் நக­ரின் மேயர் ரோஜர் மலோன், இத்­தனை மாடு­கள் மாண்­டது பெரும் அதிர்ச்­சி­யைத் தரு­வ­தா­கக் கூறி­னார். கருவி ஒன்­றில் ஏற்­பட்ட கோளாற்­றால் வெடிப்பு ஏற்­பட்­டி­ருக்­க­லாம் எனக் கூறப்­ப­டு­கிறது.