கோலாலம்பூர்: தமது அமைச்சைச் சேர்ந்த அதிகாரி ஒருவரை மலேசியாவின் 'எம்ஏசிசி' எனப்படும் ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்ததை அந்நாட்டின் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் உறுதிப்படுத்தியுள்ளார். எனினும், விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் இது குறித்து திரு சிவகுமார் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.
"அதிகாரி கைதானது எனக்குத் தெரியும். ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருவதால் இந்த விவகாரத்தின் தொடர்பில் நான் கருத்து தெரிவிக்க முடியாது," என்று நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டார். தேவைப்பட்டால் விசாரணைக்குத் மனிதவள அமைச்சு முழு ஒத்துழைப்பை வழங்கும் என்றும் திரு சிவகுமார் கூறினார்.
வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் தொடர்பில் ஊழல் இடம்பெற்றதாகச் சந்தேகிக்கப்படுகிறது. அதையொட்டி மனிதவள அமைச்சின் அதிகாரி கைது செய்யப்பட்டதாகக் கருதப்படுகிறது.

