சோல்: வடகொரியா, புதிய திட எரிபொருளில் செயல்படும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங்-8 என்ற ஏவுகணையைச் சோதித்ததாக நேற்று பெருமையுடன் மார் தட்டிக்கொண்டது. அணுவாயுதத் தாக்குதலைச் சமாளிக்கும் ஆற்றலை வலுப்படுத்துவதே இதன் நோக்கம் என்று அந்நாட்டின் அதிகாரபூர்வ ஊடகம் தெரிவித்தது.
வடகொரியத் தலைவர் கிம் ஜோங் உன்னின் வழிகாட்டுதலில் சோதனை நடைபெற்றது. "எதிரிகளுக்கு பாதுகாப்பு நெருக்கடியை இது ஏற்படுத்தும். மேலும் எதிரிகள் சிந்தனையற்ற, பொறுப்பற்ற செயல்களைக் கைவிடும் வரை ஆபத்தான எதிர் நடவடிக்கைகளை எடுத்து அச்சத்தை ஏற்படுத்து வோம்," என்று வடகொரியா எச்சரித்துள்ளது.
அண்மைய தென்கொரிய-அமெரிக்க கூட்டு ராணுவப் பயிற்சியை வடகொரியா கடுமை யாகக் குறைகூறியிருந்தது.
ஆனால் வடகொரியா இன்னமும் அத்தகைய ஆயுதத்தை உருவாக்கி வருவதாகவும் அந்தத் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற அதிக காலம் தேவைப்படும் என்றும் தென்கொரிய தற்காப்பு அமைச்சு கூறி உள்ளது.

