'மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்படும் நேரம்'

'மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து செயல்படும் நேரம்'

1 mins read
121d7fb9-afee-4117-85bf-7d4c7c231e2f
-

கோலா­லம்­பூர்: மத்­திய அர­சும் மாநில அர­சு­களும் சேர்ந்து செயல்­படும் நேரம் வந்­து­விட்­டது என்று மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­ஹிம் தெரி­வித்­துள்­ளார்.

பொது­மக்­க­ளின் நலனை முன்­னிட்டு எதிர்க்­கட்­சி­யான பெரி­க்காத்­தான் நேஷ­ன­லு­டன் சேர்ந்து செயல்­ப­ட­வும் தயா­ராக இருப்­ப­தாக அவர் கூறி­னார்.

கிளந்­தான் மாநில அர­சாங்­கத்தின் பாஸ் கட்­சி­யு­ட­னான அண்­மைய சந்­திப்பை அவர் உதா­ர­ண­மாக சுட்­டிக்­காட்­டி­னார்.

அப்­போது அம்­மா­நில முதல்­வர் அஹ­மட் யாக்­கோப்­பின் அக்­க­றைக்­கு­ரிய விவ­கா­ரங்­களைக் கேட்­ட­றிந்­த­தாக அன்­வார் தெரி­வித்­தார்.

"நாளை திரங்­கா­னு­வுக்­குச் சென்று அம்­மா­நில முதல்­வ­ரைச் சந்­திக்­கி­றேன்," என்று நேற்று பள்­ளி­வா­சல் ஒன்­றின் கட்­டு­மா­னப் பணி­யைத் தொடங்கி வைத்து அவர் கூறி­னார்.

பொதுத் தேர்­த­லின்­போது பக்­கத்­தான் ஹரப்­பா­னும் பெரிக்காத்­தான் நேஷ­ன­லும் எதிர்த்­துப் போட்­டி­யிட்­டன. ஆனால் தற்போது மத்­திய அரசு, மாநில அர­சு­க­ளுக்கு இடை­யி­லான விரி­சல் நீடிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­றார் அவர்.