நேப்பிடாவ்: மியன்மாரில் ஜனநாயக ஆட்சியைக் கவிழ்த்த ராணுவ அரசாங்கம் அண்மையில் மேற்கொண்ட ஆகாயத் தாக்குதலில் குறைந்தது 170 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. உடல்களை தகனம் செய்து வரும் குழுவினர் இந்த எண்ணிக்கையை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். கடந்த 2021ஆம் ஆண்டில் ஆங் சான் சூச்சி தலைமையிலான அரசாங்கம் கவிழ்ந்த பிறகு ராணுவம் ஆட்டம் போட்டு வருகிறது. அதன் அட்டூழியத்தில் இதுவரை 3,200 பேர் கொல்லப்பட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் மத்திய சாகெய்ங் வட்டாரத்தில் பாஸி கியே கிராமத்தில் ராணுவம் ஆகாயத் தாக்குதலை நடத்தியது. இதில் 38 குழந்தைகள் உட்பட 170 பேர் பலி யானதாக தகன வேலையில் ஈடுபட்டுள்ள ஒருவர் தெரிவித்தார்.
மியன்மார் ஆகாயத் தாக்குதலில் 170 பேர் பலி
1 mins read
-

