பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் மனிதவள அமைச்சர் வி. சிவகுமாருக்கு 'எம்ஏசிசி' எனப்படும் அந்நாட்டின் ஊழல் தடுப்புப் பிரிவு அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
மலேசியாவில் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு எடுப்பதன் தொடர்பில் ஊழல் இடம்பெற்றிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுகிறது. அதன் தொடர்பில் தங்களின் விசாரணைக்கு உதவ ஊழல் தடுப்புப் பிரிவு திரு சிவகுமாருக்கு அழைப்பாணை பிறப்பித்தது.
இந்த விவகாரத்தின் தொடர்பில் சென்ற வாரம் மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் இருவர் மனிதவள அமைச்சு அதிகாரிகள். திரு சிவகுமாரின் அந்தரங்க உதவியாளர் கைதானது உறுதிப்படுத்தப்பட்டது.

