துபாய் குடியிருப்புக் கட்டடத்தில் தீ; 16 பேர் மரணம்

துபாய் குடியிருப்புக் கட்டடத்தில் தீ; 16 பேர் மரணம்

1 mins read
cde89536-46aa-4cbc-812f-2208dab0edcb
-

துபாய்: ஐக்­கிய அர­புச் சிற்­ற­ர­சு­க­ளின் ஆகப் பெரிய நக­ரான துபா­யில் குடி­யி­ருப்­புக் கட்­ட­டம் ஒன்­றில் தீ மூண்­டது; குறைந்­தது 16 பேர் மாண்­ட­தா­க­வும் ஒன்­பது பேர் காய­முற்­ற­தா­க­வும் அர­சாங்­கம் தெரி­வித்­தது. அல்-ராஸ் குடி­யி­ருப்பு வட்­டா­ரத்­தில் உள்ள ஐந்து மாடிக் கட்­ட­டத்­தில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­க­லில் தீ மூண்­டது. அல்-ராஸ், பல வெளி­நாட்டு ஊழி­யர்­களும் வர்த்­த­கர்­களும் வசிக்­கும் துபா­யின் ஆகப் பழை­மை­யான பகு­தி­களில் ஒன்று.

பாது­காப்பு விதி­மு­றை­கள் சரி­யா­கக் கடைப்­பி­டிக்­கப்­ப­டா­த­தால் தீ மூண்­ட­தாக முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­த­தென துபாய் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­த­தென்று அர­சாங்க அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டது.

தக­வல் வந்து ஆறு நிமி­டங்­க­ளுக்­குள் தீய­ணைப்பு அதி­கா­ரி­கள் தீயை அணைத்­த­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது.

துபா­யின் மக்­கள்­தொகை 3.3 மில்­லி­யன். அவர்­களில் 90 விழுக்­காட்­டி­னர் வெளி­நாட்­ட­வர். ஆகக் கடைசி நிலவரப்படி இச்­சம்­ப­வத்­தில் மாண்­டோர் எந்த நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

இந்­ந­க­ரில் முன்­ன­தாக பல தீச்­சம்­ப­வங்­கள் நிகழ்ந்­துள்­ளன. அவற்­றால் பெரும் சேதம் ஏற்­பட்­டி­ருக்­கிறது. ஆனால், மரண எண்­ணிக்கை அதி­கம் பதி­வா­ன­தில்லை.