கோலாலம்பூர்: மலேசியாவில் ஊழல் விவகாரம் தொடர்பில் அந்நாட்டின் மனிதவள அமைச்சின்மீது 'எம்ஏசிசி' எனப்படும் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொண்டு வருகிறது. விசாரணை மேற்கொள்ளப்பட்டுவரும் நிலையில் மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் தற்போதைக்கு அதிகாரத்துவப் பொறுப்புகளிலிருந்து விலகிக்கொள்ளத் தேவையில்லை என்று மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தாம் சந்தேக நபர் அல்ல என்று திரு சிவகுமார் முன்னதாகக் கூறியிருந்தார். தமது வாக்குமூலத்தைப் பதிவிடவே நேற்று முன்தினம் 'எம்ஏசிசி'யின் தலைமையகத்துக்குச் சென்றதாகவும் தாம் கைதுசெய்யப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார். அமைச்சின் அதிகாரிகள் சிலர் அண்மையில் கைதாயினர்.

